/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கண்ணாடி பல்லக்கில் சுவாமி வீதி உலா
/
கண்ணாடி பல்லக்கில் சுவாமி வீதி உலா
ADDED : ஏப் 12, 2025 04:31 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கண்ணாடி பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது.
திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த, 4ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் வசந்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இரவு 9:00 மணிக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் காணிக்கையாக வழங்கிய, நூதன கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கல்யாண அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார், கோவில ஏஜெண்ட் கிருஷ்ணன் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.