sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணையாறு அணைக்கரை உடைப்பை சீரமைக்க கோரி தாசில்தார் முற்றுகை

/

பெண்ணையாறு அணைக்கரை உடைப்பை சீரமைக்க கோரி தாசில்தார் முற்றுகை

பெண்ணையாறு அணைக்கரை உடைப்பை சீரமைக்க கோரி தாசில்தார் முற்றுகை

பெண்ணையாறு அணைக்கரை உடைப்பை சீரமைக்க கோரி தாசில்தார் முற்றுகை


ADDED : டிச 13, 2024 10:32 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தால் ஏற்பட்ட திருக்கோவிலுார் அணைக்கட்டு கரை உடைப்பை சீரமைக்கக்கோரி தாசில்தாரை ஏமப்பேர் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கடந்த 2ம் தேதி தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், திருக்கோவிலுார் அணைக்கட்டின் கரை பகுதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெண்ணையாற்றின் நீர் ஏமப்பேர், அருமலை, கீழக்கொண்டூர் கிராமங்கள் வழியாக பயிர்களை மூழ்கடித்தது.

இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு அப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற கண்டாச்சிபுரம் தாசில்தார் கிருஷ்ணதாஸ், பொதுப்பணித்துறை பொறியாளர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகளை ஏமப்பேர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உடைந்த அணைக்கரையின் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். உடைப்பை உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து ஏமப்பேர் சாலை வரை உள்ள 300 மீட்டர் அணைக்கரையில், 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் கல் மற்றும் மண் கொட்டி 210 மீ., துாரத்திற்கு புதிதாக கரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட 13 ஆயிரம் கன அடி நீரின் வேகத்தால், எஞ்சிய பகுதியை கட்ட முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் வடியும் சூழலில் இது முழுமையாக கட்டி முடிக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us