/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.790.82 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் பிரசாந்த் தகவல்
/
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.790.82 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் பிரசாந்த் தகவல்
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.790.82 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் பிரசாந்த் தகவல்
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.790.82 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் பிரசாந்த் தகவல்
ADDED : செப் 27, 2024 07:49 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கும் முகாம் மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அரசு திட்டங்களில் வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் விவரம், பயனாளிகளின் எண்ணிக்கை, நிலுவை மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தகுதியுள்ள பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2024-25ம் ஆண்டில் ரூ.790.82 கோடி கடன் வழங்க ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயித்துள்ளது என, தெரிவித்த கலெக்டர், 10 பயனாளிகளுக்கு ரூ.19.08 கோடி தொழிற்கடன் வழங்கினார்.
மாவட்டத்தில் முதல் காலாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.274.69 கோடி, நடப்பு காலாண்டில் ரூ.81.59 கோடி தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த இலக்கின்படி மீதமுள்ள கடனுதவித் தொகைகளை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.