ADDED : பிப் 19, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 நாள் பயிற்சி துவங்கியது.
என்.எச்.ஏ.ஐ., நிறுவனம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் பயிற்சியாளர்கள் முதலுதவி, விபத்து வாகனங்கள் மீட்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பயிற்சி அளித்தனர். முதற்கட்டமாக டோல்கேட்டில் பணிபுரியும் ஆப்பரேட்டர்கள், ஆடிட்டர்கள், ரோந்து பணியாளர்கள், செக்யூரிட்டிகள் 30 பேர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை டோல்கேட் மேலாளர் ராஜேஷ், பிளாசா மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

