/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீபாவளி சீட்டு மோசடி ஆசிரியர் தம்பதி கைது
/
தீபாவளி சீட்டு மோசடி ஆசிரியர் தம்பதி கைது
ADDED : நவ 24, 2024 07:50 AM
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 46; இவர், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜெயா, 40; எலவனாசூர்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இருவரும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி, 143 பேரிடம் பல லட்ச ரூபாய் பணத்தை வசூலித்துள்ளனர். தொடர்ந்து, சீட்டு செலுத்தியவர்களிடம் பணத்தை திருப்பித்தராமல் இருந்துள்ளனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட புகைப்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி,34; அளித்த புகாரின் பேரில், முரளி, ஜெயா ஆகிய இருவரையும் எலவனாசூர்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.