/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
/
ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
ADDED : மார் 08, 2026 04:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் அறிவியல் மற்றும் மனிதவியல் துறையில் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இணை இயக்குநர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.
கருத்தரங்கில் பெரம்பலுார் எம்.ஆர்.எப்., நிறுவன முதன்மை மேலாளர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் அறிமுகவுரையாற்றினார். தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லுாரி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

