sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

/

மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்


ADDED : ஜூன் 21, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே மாணவனை குச்சியால் தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, பெரியபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பரசன்,37; இவர், அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சரியாக படிக்கவில்லை என 3ம் வகுப்பு மாணவர் ரியாஸ்முரளி,8; என்பவரை குச்சியால் அடித்தார்.

இதில் மாணவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர் வீட்டிற்கு சென்றார். அவர் முதுகில் இருந்த காயத்தை பார்த்து கோபமடைந்த மாணவரின் பெற்றோர், பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.

இது குறித்து எழுந்த புகாரின் பேரில், தற்காலிக ஆசிரியர் அன்பரசனை பணிநீக்கம் செய்து, ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us