sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளரால் பரபரப்பு

/

வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளரால் பரபரப்பு

வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளரால் பரபரப்பு

வி.ஏ.ஓ.,வை சிறை வைத்த உதவியாளரால் பரபரப்பு


ADDED : டிச 18, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம், : கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் வி.ஏ.ஓ.,வை, அலுவலகத்தில் உதவியாளர் பூட்டி சிறை வைத்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, 39; 2 ஆண்டுகளாக வடக்கனந்தல் மேற்கு பகுதி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் வடக்கனந்தலை சேர்ந்த சங்கீதா, 39; என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

வி.ஏ.ஓ., சொல்லும் எந்த பணியையும் சங்கீதா முறையாக செய்வதில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த உதவியாளர் சங்கீதா, வி.ஏ.ஓ., தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு கணக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

தமிழரசி அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் அலுவலகம் வந்த சங்கீதா அலுவலகத்தை திறந்து விட்டுள்ளார்.

இதனை வி.ஏ.ஓ., தமிழரசி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வைரலாகி பரபரப்பானது.






      Dinamalar
      Follow us