sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்

/

விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்

விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்

விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்


ADDED : நவ 03, 2024 11:26 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தீபாவளி விடுமுறை முடிந்து பணி நிமித்தமாக சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாக இருந்தது. இதனால் பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை, சேலம் உட்பட பல்வேறு பெரு நகரங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் மீண்டும் திரும்ப துவங்கினர். இதனால், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மக்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை மார்கத்திற்கு 65 பஸ்கள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 40 அரசு பஸ்கள் மற்றும் 10 தனியார் பஸ்கள் அரசு சார்பில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us