/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
/
கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
கள்ளக்குறிச்சியின் அடையாளமாக திகழ்கிறது நுாற்றாண்டை கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ADDED : ஜூன் 21, 2025 11:43 PM

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளியாகும். கடந்த ஜனவரி 31ம் தேதி நுாற்றாண்டு விழா கொண்டாப்பட்டது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் நுாற்றாண்டு சுடரை ஏற்றி வைத்தார்.
இப்பள்ளி கடந்த 1918ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக துவங்கப்பட்டது. 1938ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் தொடர்ந்து 1978ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் திகழ்கிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட 65 பேர் பணிபுரிகின்றனர். 6 முதல் பிளஸ் ௨ வரை 1,650 பேர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
குறிப்பாக 'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' வழங்கிய இளம் அறிஞர் விருது மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது உட்பட பல விருதுகளை பெற்று ராஜாராமன் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
அதேபோல் சினிமா துறையில் புகழ் பெற்று விளங்கும் இயக்குனரான முருகதாஸ், அரசு துறையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் உள்ள சிவனருள் ஆகியோரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.
பள்ளியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கு 4 அறிவியல் ஆய்வகங்களும், இடைநிலை வகுப்புகளுக்கு ஒரு அறிவியல் ஆய்வகமும் பயன்பாட்டில் உள்ளன.
மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் கற்றுக் கொள்ள உயர் தொழில் நுட்பக் கூடமான 'அட்டல் டிங்கரிங் லேப்' செயல்பட்டு வருகிறது. இவை மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
மாணவர்களின் தொழில் நுட்ப திறனை அதிகரிக்கவும், மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை சோதனையிடவும் 'ஹைடெக் லேப்' பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் 50க்கும் மேற்பட்ட கணினிகள், கணினி ஆய்வகம் மற்றும் ஹைடெக் லேப் மாணவர்களின் உயர் கல்விக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளி மாணவர் மனோஜ் கடந்த 2022-23ம் ஆண்டு கலை திருவிழா போட்டியில் மாநில அளவில் தேர்வாகி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுப் பயணம் தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் மாணவர் சுரேஷ்குமார் சிறார் திரைப்பட போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
பள்ளிக் கல்வி துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் கவின்பாலா, தமிழ் பிரபா, யுவன், நித்திஷ்வர்மன் ஆகியோர் மாநில அளவில் 5ம் இடத்தை பிடித்தனர்.
கடந்தாண்டு முதலமைச்சர் திறன் தேர்வு போட்டியில் இப்பள்ளி மாணவர்களான மோகேஷ்வரன், மகதி, நவீன் பிரபா சிறப்பிடம் பெற்றனர். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வில் கடந்தாண்டு 3 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக நாள்தோறும் வாங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பல துறையைச் சார்ந்த அதிகாரிகளால் வழிகாட்டுதல் பயிற்சி, தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இப்பள்ளி பசுமைப் பள்ளி திட்டத்திலும் தேர்வாகி, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக திகழ்ந்து வருகிறது.
-மலையரசன்,
எம்.பி.,
-சுப்ராயலு
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.
-கலாபன்
பள்ளி தலைமை ஆசிரியர்
-காயத்ரி,
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்