/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : செப் 29, 2024 06:34 AM
கள்ளக்குறிச்சி: தண்டலை கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம், நகை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 45; இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துங்கினார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை, கொலுசு, உட்பட 350 கிராம் வெள்ளி நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவு நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.