/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : நவ 27, 2024 09:52 PM

கள்ளக்குறிச்சி ;கள்ளக்குறிச்சி பகுதியில் பட்டப்பகலில் மொபைல் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் நேற்று காலை 9:30 மணிக்கு போட்டோ எடுப்பதற்காக சிலர் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திய வாலிபர் ஒருவர் மேஜையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புடைய மொபைலை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார். அப்போது சுதாரித்த பணியாளர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர் சித்தலுார் கிராமத்தை ஏழுமலை என்பது தெரியவந்தது. செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.