ADDED : பிப் 11, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், ஏமப்பேரைச் சேர்ந்த பச்சமுத்து மகன் ஆதிகேசவன், 22; கையில் கருங்கல்லை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தியதாக, ஆதிகேசவன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.