/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அக்., 2ம் தேதி நடக்கிறது
/
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அக்., 2ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அக்., 2ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அக்., 2ம் தேதி நடக்கிறது
ADDED : செப் 28, 2025 03:49 AM

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது.
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள்பெற, விஜயதசமி திருநாளில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியை நடத்துகிறது.
கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்து பிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை' ஆரம்பித்து, வைக்கும் சிறந்த தருணமிது.
விழுப்புரத்தில், மாம்பழப் பட்டு ரோடு, வ.பாளையம், சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தை களுக்கும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி 'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் இணைந்து, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., வித்யா சகேத் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
-நமது நிருபர்-