ADDED : நவ 09, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: எலவடி கிராமத்தில் தகராறில் பெண்ணைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த எலவடி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி கலா, 35; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் தாமோதிரன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று காலை 9:00 மணியளவில் கலா நிலத்தில் அவரது கனவருடன் இருந்தபோது, அங்கு வந்த தாமோதிரன் தகராறில் ஈடுபட்டு கலாவைத் தாக்கினார்.
இது குறித்த புகாரின்பேரில், வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் தாமோதிரனை கைது செய்தனர்.