/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை
/
5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை
ADDED : அக் 26, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே 5 ஆடுகளைத் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த உலகுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புலு மகன் தனசேகர். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான 5 வெள்ளாடுகளை நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
நேற்று காலை நிலத்திற்கு சென்று பார்த்தபோது 5 ஆடுகளும் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து ஆடுகளைத் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.