ADDED : அக் 16, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகாவை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் விக்னேஷ்,31; சென்னையில் உள்ள கார் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
இவர், கடந்த 9ம் தேதி இரவு 'லேப்டாப் பேக்'குடன் டிஎன்32 எண்4446 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ்சில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளார். 10ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இறங்குவதற்கு முன் தனது 'பேக்' இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
'பேக்'கில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், சார்ஜர் மற்றும் அடையாள அட்டை இருந்தது. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

