sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது : வேளாண் அதிகாரி தகவல்

/

 பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது : வேளாண் அதிகாரி தகவல்

 பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது : வேளாண் அதிகாரி தகவல்

 பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது : வேளாண் அதிகாரி தகவல்


ADDED : நவ 22, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து பருத்தி, மரவள்ளி மற்றும் காய்கறி பயிர்கள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைக ளில் சாகுபடிக்கு தேவை யான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில் யூரியா 3,178 மெ.டன், டி.ஏ.பி 1,401 மெ.டன், பொட்டாஷ் 1,830 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1,058 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 7,535 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு இப்பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலைப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது.

உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985 உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us