sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தியாகதுருகம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் சாதனை

/

தியாகதுருகம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் சாதனை

தியாகதுருகம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் சாதனை

தியாகதுருகம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் சாதனை


ADDED : மார் 27, 2025 04:39 AM

Google News

ADDED : மார் 27, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுரும்: மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 123 மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறுவட்டம், வட்டம் ஆகிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிச., மாதம் நடந்தது. இதில் பங்கேற்ற தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து, கபடி, கைப்பந்து, நீச்சல், சிலம்பம், செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 123 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

அதையடுத்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் வீராசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா, உடற்கல்வி இயக்குனர் தணிகைவேல் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழைகளை சி.இ.ஓ., கார்த்திகா வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சிலம்பரசன், உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் தன செல்வம், புவன சுந்தர சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us