sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்

/

பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்

பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்

பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்


ADDED : பிப் 17, 2025 12:59 AM

Google News

ADDED : பிப் 17, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 19; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்லவாடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 55; விவசாயி. இருவரும் நேற்று அதிகாலை 5:30 மணியளவில், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், தானிப்பாடி சந்தையில் விற்பனைக்காக செடிகளை எடுத்துச் சென்றனர்.

திருக்கோவிலுார் - ஆசனுார் சாலையில் செங்கனாங்கொல்லை அருகே சென்றபோது, திருக்கோவிலுாரில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற வேன், பைக் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிவண்ணன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

வேன் டிரைவர் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us