sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது

/

கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது

கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது

கார் மூலம் மதுபானம் டோர் டெலிவரி; திருக்கோவிலுார் வாலிபர் கைது


ADDED : ஆக 06, 2025 12:43 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் காரில் மதுபானங்கள் கொண்டு சென்று டோர் டெலிவரி செய்து வந்த நபரை போலீசார்கைது செய்து, 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலுார் சந்தப்பேட்டை, கம்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் கரீம் மகன் ஹமீத், 19; இவர், டாஸ்மாக் மது பானங்களை வாங்கி, தனது காரில் ஏற்றிக் கொண்டு, மதுபானம் தேவைப்படுவோரின் இடத்திற்கே சென்று டோர்டெலிவரி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் சந்தப்பேட்டை அருகே ஹமீது ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், சாக்குப் பையில் 60 குவாட்டர் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்து ஹமீத்தைகைது செய்தனர்.






      Dinamalar
      Follow us