sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரண்டு பைக்குகள் மோதல்; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்

/

இரண்டு பைக்குகள் மோதல்; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்

இரண்டு பைக்குகள் மோதல்; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்

இரண்டு பைக்குகள் மோதல்; பெண் உள்ளிட்ட 3 பேர் காயம்


ADDED : பிப் 11, 2024 09:54 PM

Google News

ADDED : பிப் 11, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : மாத்துார் அருகே நடந்த பைக் விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் கலைமணி,27; இவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், மணப்பெண் அழைப்பு நிகழ்ச்சிக்காக உறவினர்களை அனுப்பி விட்டு, அம்மாபேட்டையில் இருந்து பால்ராம்பட்டு நோக்கி கலைமணி பைக்கில் சென்றார்.

எதிர்திசையில், கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் மணிகண்டன்,18; என்பவர் அவரது அக்கா சந்தியா என்பவருடன் கச்சிராயபாளையம் நோக்கி பைக்கில் சென்றார்.

மாத்துார் சுடுகாடு அருகே சென்றபோது, கலைமணி ஓட்டி வந்த பைக் எதிர்திசையில் மணிகண்டன் வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் மணிகண்டன் மற்றும் சந்தியாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புது மாப்பிள்ளையான கலைமணி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us