sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு

/

 ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு

 ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு

 ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு


ADDED : டிச 22, 2025 06:00 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் நடந்து வரும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகளை திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

உளுந்துார்பேட்டையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழு நேற்று ஆய்வு செய்தனர். திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழு ஜெயராம் நாயக் தலைமையில் பொறியாளர்கள் வெங்கட்ரமணா, மல்லிகார்ஜூனாபிரசாத், சிவாபிரார்டு ரெட்டி, நாகராஜா, கிருஷ்ணாராவ், வெங்கடேஷ்வரலு, சுமதி, வெங்கட்டரெட்டி, ரவிகாந்த் ஆகியோர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூறினர்.

அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரான அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு வரவேற்றார். அறங்காவலர் குழு முன்னாள் மாவட்ட தலைவர் சந்தோஷ், பொறியாளர் ஏழுமலை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்புராயன், நிர்வாகிகள் வெற்றி, வெங்கடேசன், வழக்கறிஞர் திலீப், மகாராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us