/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்... ஏமாற்றம்; படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை தேவை
/
கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்... ஏமாற்றம்; படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை தேவை
கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்... ஏமாற்றம்; படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை தேவை
கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள்... ஏமாற்றம்; படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 14, 2025 03:33 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலை படகு துறையில் படகுகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இது, சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் என இரு பகுதிகளை கொண்டது. இந்த மலை திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் எல்லை பகுதியாக உள்ளது. கல்வராயன் மலை 4000 அடி உயரமும் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.
கல்வராயன் மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார், எட்டியாறு போன்ற பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளது. மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் போன்றவையும் உள்ளது.
கல்வராயன் மலைக்கு அருகில் உள்ள விழுப்புரம், கடலுார், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து, சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
பெரியார் நீர் வீழ்ச்சி மட்டுமே சாலைக்கு மிக அருகில் உள்ளது. மற்ற நீர் வீழ்சிகள் நீண்ட துாரம் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும்.
இதனால் வனப்பகுதிக்குள் இருக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் மட்டுமே செல்கின்றனர். குடும்பத்துடன் கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர் வீழ்ச்சி மற்றும் படகு துறைக்குகே அதிக அளவில் செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை விரும்புகின்றனர்.
கரியாலுார் அருகே உள்ள படகு துறையில் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக, 10 படகுகள் விடப்பட்டது. அதில், 4 படகுகள் பழுதானது. இதனால் புதிதாக 2 படகுகள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.
படகு துறையில் நிறுத்தபட்டிருந்த 6 படகுகள், கடந்த 2 ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது. படகுகள் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த ஓராண்டாக வேறு படகுகளும் வாங்கவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரியார் நீர்வீழ்ச்சி, படகு சவாரி செய்யவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
படகுகள் இல்லாததால், கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
கோடை காலம் துவங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில், கல்வராயன் மலை நீர் வீழ்ச்சிகள் மற்றும் படகு துறையில் தண்ணீர் இன்றி வரண்டு காணப்பட்டது.
கடந்த சில தினங்களாக கல்வராயன் மலையில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் நீர் வரத்து துவங்கி உள்ளது. படகு துறையிலும் தண்ணீர் வரத்து அதிரித்துள்ளது.
இதை அறிந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. சுற்றுலா பயணிகள், பெரியார் நீர் வீழ்ச்சிகளில் குளித்து முடித்த உடன் குழந்தைகளுடன் படகு துறைக்கு செல்கின்றனர். படகு துறையில் படகுகள் இன்றி ஏமாற்றம் அடைகின்றனர்.
கல்ராயன் மலையை சுற்றுலா தலமாக அறிவிக்க கோரி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் விரும்பும் படகு சவாரியை மீண்டும் துவங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.