/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் டிராக்டர் டிரைவர் பலி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் டிராக்டர் டிரைவர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் டிராக்டர் டிரைவர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் டிராக்டர் டிரைவர் பலி
ADDED : மார் 07, 2026 04:47 AM
மூங்கில்துறைப்பட்டு: மார்ச் 7-: மூங்கில்துறைப்பட்டில் இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல், 52; டிராக்டர் டிரைவர். இவர் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணிக்கு தனது நண்பர் பொருவளூர் சேர்ந்த மரியசெல்வம், 57; என்பவருடன், வாழவச்சநல்லுாரிலிருந்து பைக்கில் சென்றார். பைக்கை மரியசெல்வம் ஓட்டிச் சென்றார்.
மூங்கில்துறைப்பட்டு பால் சொசைட்டி அருகே சென்றபோது, எதிரே பொருவளூர் சேர்ந்த சசிகுமார் மகன் விக்னேஷ்,27; ஓட்டி சென்ற பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த பழனிவேல், மரியசெல்வம் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பழனிவேல் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின் றனர்.

