/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 07, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கி, சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நட்டார்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் தனசேகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் கோமதுரை நன்றி கூறினார்.