/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாகிஸ்தான் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
பாகிஸ்தான் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : மே 13, 2025 07:14 AM

உளுந்துார்பேட்டை, : பாகிஸ்தான் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எலவனாசூர்கோட்டையில் நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் இறந்த ராணுவ வீரர் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பஸ் நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. ஊராட்சி தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் சம்சாத், முக்கியஸ்தர்கள் மதியழகன், நேரு, வெங்கடேசன், ஞானவேல், பழனி, பெருமாள், முனீர்கான், வெங்கடேசன், பூசைமணி, சரவணன், ஜீவா, ஆறுமுகம், அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் திருமால் செய்திருந்தார்.