ADDED : பிப் 08, 2026 02:46 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.வெ.க., மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிய புறநகர் பஸ் நிலையம் திறக்கப்பட்டது.
இங்கு குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராத தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் வரதன், திலீப்குமார், சுதாகர், ராமச்சந்திரன், செந்தில், ரவி, சந்துரு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
