/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்துக்கு இடையூறு : இருவர் கைது
/
போக்குவரத்துக்கு இடையூறு : இருவர் கைது
ADDED : ஜன 16, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, மணிமேகலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.
அப்போது ஏமப்பேர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன்,25; கார்த்தி,31; ஆகியோர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பலமுறை எச்சரித்தும் அங்கிருந்து செல்லாத நிலையில், இருவரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.

