/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை
/
முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை
ADDED : நவ 27, 2024 09:50 PM
தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே வீடு தொடர்பான பிரச்சனையில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; 48. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வினோத் குமார், 37; என்பவருக்கும் இடையே வீடு தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த 27 ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து வினோத் குமார் இவரின் தாய் கண்ணம்மா, 70; மகள் இந்துமதி, 29; உறவினர்கள் ராமமூர்த்தி,57; ராதா,50; ஆகிய 5 பேர் சேர்ந்து வெங்கடேசனை திட்டி கல்லால் தாக்கினர்.
புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து வினோத் குமார், ராமமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.