/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
/
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்
ADDED : ஜன 26, 2026 04:32 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமினை, டி.இ.ஓ., ஜோதிமணி தலைமை தாங்கி, ஜூனியர் ரெட் கிராஸ் எனும் ஜே.ஆர்.சி., கொடியேற்றி துவக்கினார்.
டி.இ.ஓ., பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். ஏ.கே.டி. கல்வி நிறுவன தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் மாயக்கண்ணன் வரவேற்றார். வட்டார சுகாதார அலுவலர் ரவி, உடல்நலம் பேணுதல், போதை பொருள் எதிர்ப்பு குறித்து விளக்கவுரை வழங்கினார்.
மாநில ஜே.ஆர்.சி., பயிற்சியாளர் பிரபாகர், முகாமில் பங்குபெற்ற உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஜே .ஆர்.சி., மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இரண்டாம் நாள் முகாமிற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி, முகாமில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
டி.இ.ஓ. விஷ்ணுமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். ஜே.ஆர்.சி., பொறுப்பாசிரியர்கள் ஆறு முகம், ஜெரோம், கண்ணன், முரளி, ரவிச்சந்தர், விஜயகுமார், ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, சங்கீதா, ஜீவா ஆகியோர் பங்கேற் றனர்.
மாவட்ட இணை கன்வீனர் துரை நன்றி கூறினார்.

