sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலை விபத்தில் இருவர் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

/

சாலை விபத்தில் இருவர் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

சாலை விபத்தில் இருவர் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

சாலை விபத்தில் இருவர் பலி; டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : மார் 06, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி இரண்டு பேர் உயிரிழந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பன்னீர்செல்வம்,32; இவர் கடந்த 2014ம் ஆண்டு செப்., 28ம் தேதி இரவு 11 மணியளவில் பைக்கில் சின்னசேலத்திற்கு சென்றார். இவருடன், ரவிச்சந்திரன் மகன் ஆனந்த்,27; மற்றும் சுப்ரமணியன் மகன் வெங்கடேஸ்வரன்,40; தனி பைக்கிலும் , அகரக்கோட்டாலத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் செல்வம்,46; என்பவர் தனி பைக்கிலும் சென்றனர். அதாவது, 3 பைக்குகளில் நான்கு பேர் சென்றனர்.

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சென்ற போது, எதிர்திசையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த டிஎண்11 பி7569 என்ற பதிவெண் கொண்ட கார், பன்னீர்செல்வம் மற்றும் ஆனந்த் ஓட்டி சென்ற பைக்குகளின் மீது மோதியது. விபத்தில் பன்னீர்செல்வம், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த வெங்கடேஸ்வரன் சில ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார்.

இது குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தாமோதரன்,44; மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தமிழ்செல்வி வாதாடினார்.

அதில், விபத்து ஏற்படுத்திய தாமோதரனுக்கு ரூ.10,500 அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார்.

மேலும் தாமோதரன் மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us