/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு
ADDED : டிச 29, 2024 11:06 PM
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வரஞ்சரம் அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காயத்ரி,25; இவருக்கும், முத்துசாமி மகன் செல்வம் என்பவருக்கும் நிலப்பிரச்னையால், முன்விரோதம் உள்ளது.
கடந்த 26ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, காயத்ரி அளித்த புகாரின் பேரில், முத்துசாமி மகன் செல்வம், முருகேசன் மனைவி செல்வி ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த செல்வி அளித்த புகாரின் பேரில், அய்யப்பன் மனைவி காயத்ரி, அன்பழகன் மகன்கள் வினோத், அய்யப்பன் ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.