/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது
/
குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது
ADDED : ஜன 05, 2025 06:34 AM
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்டாச்சிமங்களத்தை சேர்ந்த தைலம்மாள்,54; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து தைலம்மாளை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.1,710 மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், புதுஉச்சிமேட்டில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த அருள்செல்வி,45; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.276 மதிப்புள்ள குட்கா பொருட்களை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.