/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு இருவார தடுப்பூசி முகாம்
/
வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு இருவார தடுப்பூசி முகாம்
ADDED : ஜன 23, 2024 11:34 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் பிப்., மாதம் 1 முதல் 14ம் தேதி வரை கோழிகளுக்கு பரவும் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக் குறிப்பு:
கோழிகளுக்கு பரவும் 'ராணிகட்' எனப்படும் வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழி வளர்ப்பவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி, அதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் பிப்., 1 முதல் 14ம் தேதி வரை கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனால் வெள்ளைக்கழிச்சல் நோய் காரணமாக கோழிகளுக்கு ஏற்படும் இறப்பினை தவிர்த்து, கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

