sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்

/

உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்

உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்

உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் திருப்பணி துவக்கம்


ADDED : ஆக 25, 2025 10:52 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் ;திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான திருப்பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. முதல் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டது. பழமையான இக்கோவிலின் ராஜகோபுரம், சன்னதியின் நுழைவு வாயிலில், ஏழு நிலைகளுடன், 120 அடி உயரத்துடன் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது.

அதேபோல் மேற்கு ராஜகோபுரம் கோவிலுக்குப் பின்புறத்தில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. இதுவும் ஏழு நிலைகளுடன் 140 அடி உயரம் கொண்டது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோபுரத்தின் திருப்பணி துவக்க விழா கோபுர நுழைவு வாயிலில் நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி, திருப்பணியை பந்தக்கால் நட்டு துவக்கி வைத்தார்.

கோவில் ஏஜென்ட் கோலாகளன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us