/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
/
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
ADDED : அக் 29, 2025 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் செவலை ரோட்டில் நகராட்சி கடை முன்பு இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார், செவலை ரோடு, பஸ் ஸ்டாண்ட் செல்லும் பகுதியில் இருக்கும் நகராட்சி கடை முன்பு நேற்று காலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து இறந்த முதியவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

