ADDED : நவ 15, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் பகண்டை கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன் முன் னிலை வகித்தனர்.
துணை பி.டி.ஓ., தினகர் பாபு வரவேற்றார். உதவி யாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார்.
ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் விபரங்கள் உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், கணக்காளர் முத்துசாமி, மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், சுசீலா பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.