ADDED : ஜூன் 10, 2025 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவில் சுவாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வைகாசி விசாக விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி கோவிலை வலம் வந்தது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.