ADDED : அக் 05, 2025 11:09 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வள்ளலார் அவதார தினம் நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சன்மார்க்க இளைஞரணி நிர்வாகி சந்திரசேகர், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற நிறுவனர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, தலைமை ஆசிரியர் இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து உலக நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் வேலு முன்னிலையில், புதுப்பாலப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் சன்மார்க்க சன்மார்க்க கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் வேலு, மோட்டார் வாகன சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சரவணன், கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் தாமோதரன் பங்கேற்றனர். சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.
கால்நடை இணை இயக்குனர் தமிழரசு நன்றி கூறினார்.