sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போக்குவரத்து மிகுதியான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; கள்ளக்குறிச்சியில் போலீசாரின் நடவடிக்கை தேவை

/

போக்குவரத்து மிகுதியான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; கள்ளக்குறிச்சியில் போலீசாரின் நடவடிக்கை தேவை

போக்குவரத்து மிகுதியான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; கள்ளக்குறிச்சியில் போலீசாரின் நடவடிக்கை தேவை

போக்குவரத்து மிகுதியான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; கள்ளக்குறிச்சியில் போலீசாரின் நடவடிக்கை தேவை


ADDED : ஏப் 09, 2025 07:57 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மிகுதியான சாலைகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன.

நீண்ட நேரம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகந்த சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்தும், விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

படுபிசியான கச்சேரி சாலை மற்றும் காந்தி ரோட்டில் சாலையோரம் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இந்த சாலைகள் வழியாக சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்று வரும் நிலையில், அவ்வப்போது வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இதற்கிடையே தற்போது சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வழக்கத்தை விட தற்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சில நேரங்களில் சாலையில் நடந்து செல்வோர் மீது கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையோரம் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நிரந்த தீர்வுக்கு காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us