sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்

/

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்


ADDED : அக் 22, 2025 11:38 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 32 வாகனங்கள் வரும் 30ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் 4 சக்கர வாகனங்கள் நான்கும், ஒரு மூன்று சக்கர வாகனம், 27 இரு சக்கர வாகனங்கள் என 32 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 30 ம் தேதி காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். முன் வைப்பு தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழு தொகையையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகன உரிமையாளர் ஏலத்திற்கு முந்தைய தேதியிலும் அல்லது ஏலத்தில் கலந்து கொள்ளும் நேரத்தில் வந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us