sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நுாறு சதவீத தேர்ச்சியுடன் சிறந்த கல்வி போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா

/

நுாறு சதவீத தேர்ச்சியுடன் சிறந்த கல்வி போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா

நுாறு சதவீத தேர்ச்சியுடன் சிறந்த கல்வி போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா

நுாறு சதவீத தேர்ச்சியுடன் சிறந்த கல்வி போதிக்கும் விவேகானந்தா வித்யாலயா


ADDED : அக் 01, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், மணம்பூண்டியில் கல்வி பணியில் பெற்றோர்களின் கனவை நனவாக்கும் தரம் மிகுந்த பள்ளியாக விவேகானந்தா வித்யாலயா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பள்ளியின் முதல்வர் இந்திரா கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி 1995ம் ஆண்டு மணம்பூண்டியில் துவங்கப்பட்டது. பள்ளியின் சிறப்பான செயல்பாட்டை அறிந்த பெற்றோர்களின் தொடர் ஆதரவால், இன்று மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாணவர்களுக்கு எந்த அளவிற்கு கல்வி முக்கியமோ, அதே அளவிற்கு ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் அவசியம். இத்துடன் உயர் கல்விக்கான ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் அளவிற்கு நீட், ஜெ.இ.இ., தேர்வுகளுக்கு தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றனர். எளிய வழியில் கல்வியை போதிக்கும் பக்குவமும், பயிற்சியும் பெற்ற திறமையான ஆசிரியர்கள், நிர்வாக திறன்மிக்க பள்ளி நிர்வாகமாகும்.

நவீனஆய்வுக் கூடங்கள், கம்ப்யூட்டர் லேப், நுாலகம், நேர்த்தியான டிஜிட்டல் வகுப்பறை, இயற்கை சூழலை ஏற்படுத்தி தரமான கல்வியை மாணவர்களுக்கு போதித்து வருகிறோம்.

மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், கர்நாடக சங்கீதம் என கல்வியுடன் தனித்திறனையும் மேம்படுத்தி வருகிறோம்.இதன் மூலம் சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்கும் போதி மரமாக எங்கள் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்திரா கூறினார். தாளாளர் முருகன் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us