/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வாக்காளர் தின உறுதிமொழி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வாக்காளர் தின உறுதிமொழி
ADDED : ஜன 25, 2024 11:46 PM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
வி.ஏ.ஓ., சங்கீதா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன் பங்கேற்று, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இணைய வேண்டும், தேர்தலில் தவறாமல் ஓட்டளித்து ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து, வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

