ADDED : ஏப் 14, 2026 11:02 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வரும் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 'தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா' எனும் தேர்தல் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. வாக்காளர் விழிப்புணர்வு துாதர் (தேர்தல் தேனீ) மூலம் பல்வேறு நிகழ்ச்சி நடத்தி, 100 சதவீத ஓட்டளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
