நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிக்கேதனில் வியாச பூஜை நடந்தது.
பகவத் கீதை உள்ளடக்கிய மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசரின் நினைவாக கொண்டாடப்படுவது வியாச பூஜை. குரு பரம்பரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை நடந்தது. சுவாமி நித்தியானந்தகிரி அருளாசியுடன், அறக்கட்டளை தலைவர் சுவாமி பிரபவானந்த சரஸ்வதி முன்னிலையில் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, வியாச பூஜையை நடத்தினர்.
ஞானானந்தா நிக்கேதன் அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன், அறங்காவலர்கள் சுப்ரமணியன், சுவாமிநாதன், வெங்கடேஷ், விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் முதல்வரும், சமஸ்கிருத பேராசிரியருமான சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.