/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
/
நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 14, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், கச்சேரி சாலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தேசிங்கு தலைமை தாங்கினார். நிர்வாகிககள் ரமேஷ், பழனியப்பன், சங்கர், ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். கொள்கைப் பரப்பு செயலாளர்கள் மாரியப்பன், ரமேஷ் பேசினர். இதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான, வக்ப் வாரிய சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

