/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
நகை, பணம், குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : ஜன 22, 2024 12:42 AM
கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் அருகே நகை, பணம் மற்றும் குழந்தையுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; இவர்களுக்கு ஜீவதர்ஷினி, 5; என்ற மகள் உள்ளார்.
கடந்த 20ம் தேதி மகள் ஜீவதர்ஷினியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்னலட்சுமி வீடு திரும்பவில்லை. வீட்டிலிருந்த 3 லட்சம் ரூபாய் மற்றும் 18 சவரன் நகைகளும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு வழக்கு
கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் மோகன் மகள் அனுசுயா, 20; இவர், கடந்த 20ம் தேதி காலை 9:30 மணிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.