ADDED : மார் 16, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்': அரகண்டநல்லுார் அருகே கணவரைக் காணவில்லை என போலீசில், மனைவி புகார் செய்துள்ளார்.
அரகண்டநல்லுார் அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பிரகாஷ், 30; கடந்த மாதம் 19ம் தேதி வீரபாண்டியில் உள்ள தனது மாமனார் கோதண்டபாணி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி பாலசங்கரி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

