ADDED : நவ 10, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : மாயமான மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ், 30; , இவரது மனைவி ரஞ்சனி,20; கடந்த 6 ம் தேதி வீட்டிலிருந்த ரஞ்சனி இரவு 8 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.